Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை அஞ்சலியை மிரட்டுவதா? - கரண் கண்டனம்

தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தில் நடித்ததற்காக நடிகை அஞ்சலியை மிரட்டுவதா என கண்டித்துள்ளார் நடிகர் கரண்.
Karan and Anjali
நடிகர் கரண்-அஞ்சலி ஜோடியாக நடித்துள்ள படம் தம்பி வெட்டோத்தி சுந்தரம். விசி வடிவுடையான் இயக்கியுள்ளார்.

இப்படத்துக்கு குமரி மாவட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்குள்ள தமிழ் நாடு லயன் பால் அசோசியேஷன் அமைப்பு படத்தின் தயாரிப்பாளர் செந்தில்குமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கலெக்டர் அலுவலகம் எதிரில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து கரண் சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசுகையில், "குமரி மாவட்டம் கேரள எல்லையில் வாழ்ந்த தம்பி வெட்டோத்தி சுந்தரம் வாழ்க்கையை படமாக்கி உள்ளோம். நான் வெட்டோத்தி சுந்தரமாக நடித்துள்ளேன். இதன் படப்பிடிப்பிலேயே சிலர் கலாட்டா செய்தனர். அஞ்சலியை தாக்க முயற்சியும் நடந்தது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த படம் குமரி மாவட்டங்களின் பெருமையை சொல்லும். எவ்வித அவதூறான காட்சிகளும் இல்லை. தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர்.

வருகிற 10-ந்தேதி படத்தை வெளியிட உள்ளோம். இந்த நிலையில் இப்படத்தை எதிர்த்து வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது, போராட்டம் நடத்துவது என சிலர் ஈடுபட்டுள்ளனர். எங்களை மிரட்டுகிறார்கள். படத்தில் யாரையும் புண் படுத்தவில்லை. திட்ட மிட்டபடி படம் வெளியாகும்," என்றார்.

"இந்தப் படம் குமரி மக்களையும் மண்ணையும் அடையாளப்படுத்தும் படமாக இருக்கும். தவறாக எதையும் சித்தரிக்கவில்லை," என்றார் உடனிருந்த இயக்குநர் வடிவுடையான்.

No comments:

Post a Comment

Powered by Blogger.

Back links

dreamhost coupons Promote Your Blog

Followers

Web hosting for webmasters